Tuesday, March 16, 2010

குட்டிப் பாப்பா எங்கே?

குட்டிப் பாப்பா தோட்டத்துக்கு விளையாடப் போனாளாம். அதுக்கு அப்புறம் அவங்க அம்மா தேடி வந்தாங்களாம். குட்டிப்பாப்பாவைக் காணோம்னு அழுதாங்களாம். தோட்டத்தில் விளையாடிட்டு இருந்த நானியும், யானியும் அம்மாவைப் பார்த்து , கவலைப்படாதீங்க, நாங்க குட்டிப் பாப்பாவைத் தேடறோம்னு சொன்னாங்களாம்.

யானியும், நானியும் ரோசாப்பூ கிட்ட போய், "ரோசா ரோசா , குட்டிப்பாப்பா பார்த்தியா?" , அப்படீனு கேட்டாங்களாம். ரோசாப்பூ , "ம்... நான் கூட ஒரு பூ கொடுத்தேனே. ஆனால் எங்க போனானு தெரியலையே" அப்படீனுச்சாம்.






யானியும், நானியும், பட்டாம்பூச்சி தோட்டமெல்லாம் சுத்துமே, அது கிட்ட கேட்போம்னு பட்டாம்பூச்சியைத் தேடிப் போனாங்களாம். "பூ பூவா சுத்தற அழகு பட்டாம்பூச்சியே!! குட்டிப்பாப்பா பார்த்தியா?" அப்படீனு கேட்டாங்களாம். பட்டாம்பூச்சி, "ம், நான் கூட அவளோட விளையாடினேனே... ஆனால் எங்க போனானு தெரியலையே" அப்படீனுச்சாம்."




யானியும், நானியும், "காத்து தான் ஊரெல்லாம் சுத்தும் அது கிட்ட கேட்போம்னு காத்தைக் கூப்பிட்டாங்களாம். "சில்லுனு பூ வாசம் சுமந்து வரும் காத்தே! காத்தே!! குட்டிப்பாப்பா பார்த்தியா?" அப்படீனு கேட்டாங்களாம். காத்து, "ம், நான் கூட அவள் முடியைக் கலைச்சு விளையாடினேனே!!! ஒரு நிமிஷம் இருங்க எங்க இருக்கானு சுத்தி பார்த்துட்டு வந்துடறேன்!!!" அப்படீனு வேகமா போச்சாம்.

கொஞ்ச நேரம் கழிச்சு காத்து வந்து , "தோட்டம் தாண்டி ஒரு வீட்டு திண்ணையில அழகா குட்டிப்பாப்பா தூங்கிட்டு இருக்கா" அப்படீனுச்சாம். யானியும் நானியும் அவங்கம்மா கிட்ட சொன்னாங்களாம். அவங்கம்மா அங்க போனாங்களாம். அப்பதான், குட்டிப்பாப்பா எழுந்து யாரையும் காணோம்னு அழப் போனாளாம். அவங்கம்மாவைப் பர்த்ததும் சிரிச்சாளாம். "தனியா எங்கேயும் போகக் கூடாது", அப்படீனு அவங்கம்மா குட்டிப் பாப்பாவைத் தூக்கிட்டாங்களாம். யானியும் நானியும் அவளோட விளையாடிட்டு வந்தாங்களாம்

3 comments:

prabhadamu said...

அமுதா குட்டி உலகம் ரொம்ப நல்லா இருக்கு. நனே அதை அப்டிச்சு குழந்தை ஆனா மாதிரி சின்ன வயது நியாபகம் வருது. நல்ல தலம் வாழ்த்துக்காள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இந்த சுட்டி உலகத்திற்கு முதன் முறையாக வருகிறேன்.நன்று நன்று.

OPgiriYT said...

vera level athai