Monday, May 4, 2009


(படம்: இணையம்)

எங்கள் வீட்டு கொலுவிலே
எத்தனையோ பொம்மைகள்
தங்கம் போல மின்னுதே
தக தக என்று ஜொலிக்குதே

பிள்ளையாரோடு முருகனும்
பார்வதியின் மடியிலே
கொள்ளை கொண்ட கண்ணனோ
கோபியரின் நடுவிலே

இராமரோடு சீதையும்
இலஷ்மணனும் அனுமனும்
இங்கே வந்து பாருங்கள்
வேண்டுவதைக் கேளுங்கள்...

3 comments:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

குழந்தைகளை மடியில் போட்டுக்கொண்டு கதை சொன்ன காலம் போய் இப்படி இணையத்தில் கதை சொல்ல நேர்ந்துவிட்டதே வருத்தமாக இருந்தாலும் ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான்.

sankarkumar said...

nalla muyarchi

ராமலக்ஷ்மி said...

அருமை. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!